Thursday, June 21, 2012

கண்ணகி வழிபாடு

திராவிடப் பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினை கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகி அம்மன் வழிபாட்டிற் காண்கிறோம்.
12 ஆம் நூற்றாண்டிலே அரசோற்றிய 2 ஆம் கயபாகு மன்னன் கண்ணகி வழிபாட்டை இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொணர்ந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
மானிடப் பெண்ணாக சோழ நாட்டிலே பிறந்த கண்ணகி பாண்டிய நாட்டிலே நீதி கேட்டுப் போராடி சேர நாட்டிலே தெய்வமாக மாறி வானகம் புகுந்தார்.
வானகம் சென்ற காட்சியை செங்குன்றத்திலுள்ள வேடுவர்கள் கண்டு சேரமன்னனிடம் கூற சேரன் செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல் எடுத்து கங்கையில் கழுவி வஞ்சி மாநகரில் கண்ணகிக்கு சிலையெடுத்து பிரதிஷ்டை செய்தான். அப்பெருவிழாவிற்கு இலங்கையிலிருந்து சென்ற கயபாகு மன்னன் கண்ணகி சிலைகளைக் கையோடு கொணர்ந்து ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை ஆரம்பித்து வைத்தான்.

No comments:

Post a Comment